கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Aug 31, 2010

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.

இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்

உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்

அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்

அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.

Leia mais...

Aug 29, 2010

கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

மென் பொருளை தரவிறக்கம செய்ய

Leia mais...

Aug 27, 2010

இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு..!

கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய தேவையில்லை. இணையத்தில் தேட வேண்டுமா?உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.

இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.

ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.

Leia mais...

Aug 26, 2010

ஜிமைல் தொலைபேசிச் சேவை அறிமுகம் .........

இன்று ஜிமைலினை திறந்தபோது நீங்கள் ஆச்சர்யப்பட்டதை நாம் அறிவோம். நீங்கள் நினைப்பது சரிதான், தற்போது உங்கள் ஜிமைல்(gmail) கணக்கில் இருந்தவாறே உங்கள் நண்பனின் போனுக்கு(phone) ரின்ங் பண்ணலாம், கோல்(call) பண்ணலாம்.எல்லாம் செய்யலாம்.

கூகிள் , தனது கூகிள் வொய்ஸ்(Google Voice) சேவையினை ...ஜிமைலுடன் இணைத்து இந்த புதிய அனுபவத்தை தருகிறது. உங்கள் ஜிமைலில் தோன்றும் Call Phone ஐகனை(Icon) சொடுக்கி உங்கள் நண்பனின் / நண்பியின் போனுக்கு கோல்(Call) எடுக்கலாம்.

கட்டணம் அறவிடப்படுமா??? இல்லையா??? கூகிளும் பாவம் தானே..யோசிக்க வேண்டாம் ஒரு சிறிய அளவி்ல்தான் அவர்கள் கட்டணம் அறவிடுகிறார்கள். தற்போதைக்கு அமெரிக்கா(USA) மற்றும் கனடாவில் (Canada) உள்ள நண்பிக்கு இலவசமாக(தற்போதைக்கு) கோல் பண்ணலாம். ஏனைய நாடுகளுக்கு சிறிய கட்டணம் அறவிடப்படுகிறது(கட்டண விபரம் https://www.google.com/voice/rates#S Australia, Brazil , Denmark , Guam, Hongkong, Hungary , Iceland , Italy , Japan , Mexico மற்றும் Newzealand போன்ற நாடுகளுக்கு வெறும் 0.02 அமெரிக்க டொலர்களுக்கு கோல் பண்ணலாம்.
இந்த புதிய சேவையை பயன்படுத்த இந்த voice and video plugin. http://www.google.com/chat/voice/ ஐ இன்ஸ்டால்(Install) செய்து கொள்ளுங்கள்.

 

தொழில்நுப்பம் செய்தியோடை

 

Leia mais...

Aug 24, 2010

விண்டோஸ் 7 அற்புத வசதிகள்

விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட்  (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில்  “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால்,Start  மெனு சென்று  My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில்,  Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும்.

இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது.

பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI  dots per inch)  அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர்  Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply  மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில்http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ஞீடிணச்ட்ச்டூச்ணூ என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது. பின்னர் அவற்றைக் காணலாம்.

Dileep

Leia mais...

Aug 21, 2010

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள நண்பர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதி

கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

" பேஸ்புக் ப்ளேசெஸ் " என அழைக்கப்படும் இந்த புதிய பயன்பாட்டினில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் பயனாளிகள் இருக்கும் இடம் கண்டறியப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் விரைவில் உலகெங்கும் உள்ள பேஸ்புக் பயனாளிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது அந்நிறுவனம்.

அதே நேரத்தில் பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தினால் குற்றங்கள் பெருக வாய்ப்பு அதிகம் உள்ளதாக பலர் விமர்சித்துள்ளனர். ஒரு நபர் எங்கே இருக்கிறார் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பன போன்ற விபரங்களை வெளியிடுவது கொள்ளை சம்பவங்கள் பெருக வழி வகுக்கும் என்கின்றனர் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை சேர்ந்தோர்.

Tamilcnn

Leia mais...

Aug 19, 2010

ஆப்பிளின் ஐபேட் (IPAD) விரிவான அறிமுகம்

தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டுபண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான்.

இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.
ஐபோன் வருவதற்கு முன்பு மொபைல் சந்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தொடுதிரை மொபைல் என்பது கனவுதான். ஆனால் ஐபோன் வந்த பின்பு எத்தனை நிறுவனங்கள் வகை வகையான தொடுதிரை மொபைல்களை போட்டு தாக்கி வருகின்றன. மொபைல் போன் சந்தையில் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியது ஐபோன் என்றால் அது மிகையாகாது.  ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துவது அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப் படுகிறது.


மடிக்கணினிக்கும், மொபைல் போன்களுக்கும் இடையில் எளிதாக எங்கும் எடுத்து செல்லும் எளிமையுடன் நெட்புக் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் சிறிய திரைகளுடன் கூடிய நெட்புக் கணினிகளை வெளியிடத் துவங்கி உள்ளன.

கூகிள் நிறுவனமும் தனது புதிய இயங்குதளமான குரோம் ஓஎஸ் ஆரம்பத்தில் நெட்புக் கணினிகளுக்காகத்தான் வெளியிடுகிறது. இவை நேட்புக் கணினிகளுக்கான சந்தை எதிர்காலத்தில் அதிகம் இருப்பதை உணர்த்துகிறது.

இந்த சந்தையையும் தனது வித்தியாசமான தயாரிப்பு மூலம் கலக்கப் போகிறது ஆப்பிள். நேற்று (ஜனவரி 27, 2010) ஐபேட் (IPad) எனும் தனது புதிய தயாரிப்பை உலகுக்கு தந்துள்ளது.  தோற்றத்தில் பெரிய ஐபோன் போன்று இருக்கும் ஐபேட் 9.5 இன்ச் தொடுதிரையுடன் வருகிறது. இது Wi-Fi, Wi-Fi + 3G என்று இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

அரை அங்குல தடிமனுடன், .68 kg எடையுடன் வரும் ஐபேட்தில் இணையத்தில் உலவுதல், இசை கேட்டல், வீடியோ பார்த்தல், ஈபுக் (Ebook) வாசித்தல் போன்ற வேலைகளை எளிமையாக செய்து கொள்ள முடியும். தொடுதிரை உள்ளதால் மற்ற கணினிகளை உபயோகிப்பதை விட ஐபேட்டை உபயோகிப்பது மிகவும் எளிது.

ஐபேட் இயங்குதளம், ஐபோனின் இயங்குதளத்தை ஒத்ததாகவே உள்ளது. செயல்முறைகள் பெரும்பாலும் ஐபோனே போன்றே உள்ளன. இது ஆப்பிளின் 1Ghz பிராசசரில் இயங்குகிறது. இதன் முழுமையான தொழிநுட்ப விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள். இதன் பயன்பாடுகள் குறித்து வீடியோவை பாருங்கள்.
இந்த ஐபேட் மக்களை எந்த அளவு கவரும்?  கவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எடை குறைவு. எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்து செல்ல முடியும். தொடுதிரை. எளிதில் உபயோகிக்கலாம். மடியில் வைத்துக்கொண்டு புத்தகம் போல வாசித்து கொள்ளலாம். காலத்தின் வளர்ச்சியில் பெரும்பாலான மாணவர்கள் கையில் சிலேட் போன்று ஐபேட் மாதிரியான சாதனங்கள் உட்காரும் காலம் வரலாம்.

ஐபேட்டில் உள்ள குறைகளை பார்க்கலாமே. மல்டிடாஸ்கிங் (Multitaking) கிடையாது. ஒரே நேரத்தில் பல செயலிகளில் (Application) வேலை செய்ய இயலாது. வெப்கேம் இல்லாததால் வீடியோ சாட்டின் செய்ய இயலாது. 3G மாடலாக வந்தாலும் அதை நீங்கள் இணைய இணைப்புக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியுமே தரவிற போன் அழைப்புகள் (Phone Calls), குறுஞ்செய்தி (SMS) சேவை முதலியவற்றை பயன்படுத்த இயலாது.

நேரடியாக USB க்களை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது, அதற்கென தனியே அடாப்டர் தேவைப்படும். Flash சப்போர்ட் கிடையாது. இணையதளங்களில் உள்ள பிளாஷ் பகுதிகள் தெரியாது. புரியும்படி கூற வேண்டும் என்றால் இணையப்பக்கங்களில் உள்ள Flash வீடியோக்களை பார்க்க இயலாது. 16GB, 32GB, 64GB போன்ற அளவுகளில் கிடைக்கிறது. இருந்தாலும் நீங்கள் தனியே மெமரி கார்ட் வாங்கி இதனை மேம்படுத்தி (Upgrade) கொள்ள முடியாது.

ஐபேட்டின் இயங்குதளம் ஐபோன் போன்று கட்டுப்பாடுகளை உடையது. அவற்றிற்கு யார் புதிய செயலிகளை வெளியிட்டாலும் ஆப்பிள் அனுமதித்தால் மட்டுமே அவற்றை ஐபேட்டில் பயன்படுத்த முடியும். ஐபோனுக்கான கூகுளின் அருமையான பல செயலிகளை (Applications) ஆப்பிள் மட்டுறுத்தியிருக்கிறது.

எனவே ஆப்பிள் என்ன தருகிறார்களோ அவற்றை தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற கணினிகள் போன்று பிறர் செயலிகளை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது. உதாரணத்திற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word), பயர்பாக்ஸ் விரும்புபவர் என்றால் அதனை ஐபேட்டில் உபயோகிப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

விலையைப் பொறுத்தவரை மிகவும் அதிகம் இல்லை. Wifi மாடல் 499 டாலரில் இருந்தும், 3G+Wifi மாடல் 629 டாலரில் இருந்தும் கிடைக்கிறது. ஐபோன்களின் அறிமுக விலையை ஒப்பிடும் போது ஐபேட்டின் விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

மொத்தத்தில் ஆப்பிளின் ஐபேட் புதுமையான, கவர்ச்சிகரமான தயாரிப்பாக வந்துள்ளது. ஆனால் சூப்பர் என்று கொண்டாடுவதற்கு குறைகள் இன்றி இல்லை. இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்தால் நாம் கூறிய குறைகள் அற்ற ஐபேட் போன்ற புதிய தயாரிப்புகள் கூகிள், நோக்கியா போன்ற நிறுவனங்களிடம் இருந்து வரலாம்.  அதற்குள் ஐபேட் சந்தையை ஆக்ரமித்து கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது.

Leia mais...

கூகிளின் அடுத்த வேட்டை ஒன் லைன் கேம்

எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இணையத்தில் தனது ஆக்கிரமிப்பை மேற்கொண்டுவரும் கூகிள், தற்போது தனது பார்வையை ஆன் லைன் கேம்(Online Games) பக்கம் திருப்பியுள்ளது.கடந்த மே மாதம் இடம் பெற்ற I/O மகாநாட்டில் வாக்குறுதியளித்ததிற்கு அமைய இந்த ஒக்டோபரில் (1up அறிக்கை) தனது Chrome web store இனை உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த சந்தையானது குறிப்பாக ஆன்லைன் கேமினை குறிவைத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆன் லைன் கேமினை (Online Games) முக்கியப்படுத்துவதற்கான காரணங்களாக கூகிள் நிறுவனம் குறிப்பிடுவதாவது,
01. சிறந்த ஆன் லைன் கேமினை(Online Games) இணையத்தில் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளமை.
02. இந்த Games களின் பிரபல்யத்தன்மையினை அறிந்து கொள்ள எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருப்பது.
03. இந்த Games தொடர்பான கருத்துக்களை அறிய ஒரு சிறந்த ஒரு இடம் இல்லமை.
04. Game வடிவமைப்பாளர்கள், அவர்களின் கேம்களை வைத்து பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த வழி இல்லமை.
இது போன்ற பலகாரணங்களை கூறுகின்றது. எது எவ்வாறு இருந்தாலும் ஆன்லை கேம் துறையில் இது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

lankasritech

Leia mais...

Aug 16, 2010

மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.

இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக "Your most popular sites" என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது. இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும்.

அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும்.

இவை மற்றவர்களுக்கு, மைக்ரோசாப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகி யிருக்கும் தகவல்களே. சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காகக் காத்திருப்போம்.

தகவல் உலகம்

Leia mais...

Aug 15, 2010

வீடியோ கன்வர்டர் இலவசமாக தரவிறக்கம் செய்திட

கடந்த பத்து ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்து உள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி3 பிளேயர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் என இந்தப் பட்டியல் தொடர்கிறது.

ஒவ்வொரு சாதனமும் வீடியோ பைல்களை இயக்க தனித்தனி வரையறைகளைக் கொண்டுள்ளன. இந்த சாதனங்களுக்கேற்ற பார்மட்டுகளில் வீடியோ பைல்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இவற்றுடன் திரை அளவு மற்றும் ரெசல்யூசன் அளவுகளும் வீடியோ இயக்கத்திற்கு வரையறை களைத் தருகின்றன.

எனவே வீடியோ பைல்களை இந்த சாதனங்களில் இயக்க முயற்சிக்கையில், அவற்றின் பார்மட் வரையறைகளை, அந்த சாதனங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. பார்மட் மாற்றம் ஓர் அவசியத் தேவையாகிவிட்ட சூழ்நிலையில், இதற்கு உதவிட பல இலவச புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிக அதிகமாகப் பயன்படக் கூடிய புரோகிராம் ஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் (Hamster Free Video Converter) ஒன்று.

இந்த புரோகிராம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது.வீடியோ பார்மட் மாற்றம் மூன்று நிலைகளில் மிக வேகமாக மாற்றப்படுகிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் மாற்றுகிறது.

முதலில் வீடியோ பைல்களை மொத்தமாக இதன் இன்டர்பேஸுக்குள் இழுத்து அமைத்துவிடலாம். ஏறத்தாழ அனைத்து வீடியோ பார்மட்களுக் கிடையேயும் (AVI, MPG, WMV, MPEG, FLV, HD, DVD, M2TS மற்றும் பிற) இந்த புரோகிராம் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருகிறது. இரண்டாவது நிலையில் மாற்றத்திற்கான வரையறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். பைல் பார்மட் அடிப்படையில் மட்டுமின்றி, சாதனங்களுக்கு ஏற்ற வகையிலும் இது பார்மட்டை மாற்றித் தருகிறது. எடுத்துக் காட்டாக, ஐபேட், ஐபோன், எக்ஸ்பாக்ஸ், பி.எஸ் 3, ஆப்பிள் டிவி, பிளாக்பெரி, ஐரிவர் என சாதனங்களின் பெயர்களைக் கொடுத்தும் வீடியோ பைல்களின் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.

எந்த பார்மட்டில் வெளியாக வேண்டுமோ, அதற்கான வீடியோ தன்மை, ரெசல்யூசன், கோடக் பைல் ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தையும் முடித்த பின்னர்,இறுதி பட்டன் அழுத்தி, மாற்றம் மேற்கொள்ள கட்டளை இடலாம். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் செயல் வேகத்திற்கிணங்க, வீடியோ பார்மட் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

இந்த புரோகிராமின் சிறப்பு, வீடியோ பைல் பார்மட்டுகள் குறித்து அவ்வளவாக அறியாதவர்கள் கூட இந்த புரோகிராம் மூலம் தங்கள் வீடியோ பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையான வழி நடத்துதல் தரப்பட்டுள்ளன.

இதனை இலவசமாக தரவிறக்கம் செய்திட என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்ல வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கத்திற்கான தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் 7 இயக்கத்திற்கும் இணைவாக மாற்றத்தை மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த புரோகிராம் குறித்த் தகவல்கள் 40 மொழிகளில் கிடைக்கின்றன.

Leia mais...

Aug 14, 2010

பேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதி

இணையதளம் மூலம் தொலைபேசி சேவை தரும் நிறுவனமான வோனேஜ் நிறுவனம், பேஸ்புக் நண்பர்களுக்குள்ளே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து, வோனேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இணையதளத்தின் மூலமமான தொலைபேச வசதியை பிரபலப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் ‌போன்களில் இந்த வசதி அறிமுகப்படு்த்தப்பட உள்ளதாகவும்,

இந்த வசதியைப் பெற, வோனேஜ் இணையதளத்திற்கு சென்று, அதற்குரிய சாப்ட்வேரை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும், அதன்பின், அவர்கள் வழக்கம்போல, பேஸ்புக்கை லாக் இன் செய்தால், அதில் அவர்களின் நண்பர்களின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தகவல் தொலைதொடர்பு வரலாற்றின் முக்கிய மைல்கல் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leia mais...

இணையத்தில் பொழுதை கழிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. எங்களுக்கு எல்லாம் வெற வேலையே இல்லையா? என்று கோபப்படக்கூடாது.அப்படி பார்த்துக்கிட்டு, படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு தான் கீழே உள்ள மேட்டர்...அப்படி மொய்பவர்களுக்கு இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என நாளிதழ் ஓன்றில் செய்தி வந்துள்ளது.

அமெரிக்காவின் டெய்லி மெயில் எனும் மருத்து இதழின் ஆசிரியர் டேவிட் டஸ்டன் கூறுகையில்...

நாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டரில் பணி செய்வதன் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இணையதளத்தில் முழ்கிவிடுவோம் அவ்வாறு நாள் ஒன்றுக்கு 23 மணிநேரமும் சைட் பார்ப்பவர்களுக்கு 65 சதவீத இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இது சாதாரணமாக 11 மணிநேரம் சைட் பார்ப்பவர்களைவிட அதிகம் ஏற்படும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக நாம் நடக்கும் போது, நிற்கும் போது கால்களில் தசைகளில் வேலை செய்கின்றன. இதன் மூலம் உடலில் நம் இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு சீராக உள்ளது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் போது தான் உடல் ஆக்கச்சிதைவு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இருதயம் பலவீனமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இது போன்று ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பதும் அதற்கு காரணமாகும். ஆகவே சிறிது நேரம் எழுந்து நிற்பது தான் சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.பெண்களில் ஆறு மணிநேரத்திற்கு மேல் பணியாற்றினால் 37 சதவீதமும், ஆண்களுக்கு 18 சதவீதமும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் மயோ மருத்துவமனையின் மருத்து பேராசிரியர் ஜேம்ஸ் லேவின் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leia mais...

Aug 12, 2010

கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்'

கூகுள் அண்ட்ரோயிட் மொபையில் எனப்படுவது கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தின் மூலம் இயங்கும் கையடக்கத் தொலைபேசிகளாகும்.

இக்கையடக்கத் தொலைபேசிகளானது உலகம் பூராகவும் மிகவும் வேகமாக விற்பனையடைந்து வருவதும் போட்டியாளர்களை தனது வேகமான விற்பனை மூலம் அதிர்ச்சியடையச் செய்துவருவதும் நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில் முதல் முறையாக அக் கையடக்கத் தொலைபேசிகளது 'ட்ரொஜன்' எனப்படும் தீங்கு நிரலினால் (மெல்வெயார்) தாக்கப்பட்டுள்ளதாக பிரபல மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கை அறிவித்துள்ளது.

இது 'ட்ரொஜன்'- எஸ்எம்எஸ்.அண்ட்ரோயிட் ஒஸ்.பேக்பிளேயர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி 'ட்ரொஜன்' ஆனது மீடியாபிளேயர் மென்பொருள்போல தோற்றமளிக்கும் ஒரு தீங்கு நிரலாகும். குறுந்தகவல்கள் மூலம் பாவனையாளரின் கையடக்கதொலைபேசியை அடையும் மேற்படி தீங்கு நிரலானது 13 கெபி அளவினைக்கொண்டதாகும்.

பிறகு அதன் பாவனையாளர்கள் அதனை தமது கையடக்கதொலைபேசிகளில் நிறுவும் (இன்ஸ்டால்) படி அறிவுறுத்தப்படுவர்.

அவ்வாறு அதனை நிறுவியதும் பாவனையாளர்கள் அறியாத வண்ணம் இரகசியமாகக் குறிப்பிட்ட பாவனையாளரின் கையடக்கதொலைபேசியிலிருந்து பல்வேறு பாவனையாளர்களுக்கு அது குறுந்தகவல்களை அனுப்பத் தொடங்கும்.

அந்த ஒவ்வொறு குறுந்தகவல்களும் 5 டொலர்கள் வரை நட்டத்தினை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெருந்தொகையை இழக்கநேரிடும். தற்போது இந்த 'ட்ரொஜன்' ரஸ்யாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்வகை கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென கெஸ்பர்ஸ்கை நிறுவனம் அறிவித்துள்ளது.

VK

Leia mais...

Aug 10, 2010

கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கூகுள் நிறுவனத்தின் ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனத்தின் பெயரில் அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக, வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வங்கி கணக்கு ரகசிய எண், வேலை, எந்த நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பூர்த்தி செய்து உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்.
 
கடிதம் கிடைத்து ஏழு நாட்களுக்குள் மறுபதிவு செய்யாவிட்டால் ஜி-மெயில் கணக்கு நிரந்தரமாக காலாவதி ஆகிவிடும். இவ்வாறு குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் பார்த்த வாடிக்கையாளர்கள், குழம்பினர். சில நாட்களுக்குப் பின்னரே, இக்கடிதம் போலியானது என தெரிந்தது. இதுகுறித்து, கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: கூகுள் நிறுவனம் சார்பில், அது போன்ற கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. சில விஷமிகள் மோசடி செய்யும் எண்ணத்தில், கூகுள் நிறுவன பெயரில் தவறான கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
 
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, பண மோசடிகளில் ஈடுபடும் எண்ணத்துடன் அவர்கள், ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்று தனிப்பட்ட விவரங்கள் கேட்டு, நாங்கள் ஒருபோதும் கடிதம் அனுப்புவது கிடையாது. தனிப்பட்ட விவரங்கள் கேட்டு வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, வாடிக்கையாளர்களை அவ்வப்போது நாங்கள் எச்சரித்து வருகிறோம்.
 
இதுபோன்ற கடிதங்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். கடிதங்கள் குறித்து சந்தேகம் எழுந்தால், http://mail.google.com/support/bin/answer என்ற முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களை கொண்டு, போலியான கடிதங்களை தெரிந்து கொள்ளலாம். இன்டர்நெட் பயன்படுத்துவோர், இதுபோன்று வரும் மோசடி கடிதங்களை விசாரணை மையங்கள் உதவியுடன் அறிந்துகொண்டு öŒயல்படுவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leia mais...

Aug 9, 2010

'கூகுள் மீ' இரகசிய தளம்! : உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னுமில்லை

' கூகுள் மீ ' என்ற சமூக வலைப்பின்னல் தளமொன்றினை கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம்.

கூகுள் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் தனது மற்றைய சேவைகளான 'ஜீ மெயில்' எனப்படும் மின்னஞ்சல் கணக்கு, கூகுள் பஸ் மற்றும் அதன் மற்றைய வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டும் ' ஸ்லைட் ' மற்றும் ' சிங்கா ' ஆகியவற்றினை உபயோகப்படுத்தியும் தனது சமூக வலைப் பின்னல் தளத்தினை உருவாக்கி வருவதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.

' ஸ்லைட் ' நிறுவனமானது மற்றைய சமூக வலைப்பின்னல் தளங்களான ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு மென் பொருட்களை உருவாக்கிய நிறுவனம்.

இந் நிறுவனத்தை கடந்த 4ஆம் திகதி கூகுள் விலைக்கு வாங்கியது.

மேலும் ' சிங்கா ' எனப்படும் ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு இயங்குதளம் சார்ந்த விளையாட்டுக்களை உருவாக்கிய நிறுவனத்தில் கூகுள் 100 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கூகுளின் இத்தகைய நடவடிக்கைகளானது, பாவனையாளர்களுக்குப் புது வகையான அனுபவத்தினை தரும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இத்தளத்தில் கணினி விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூகுளின் மற்றைய சேவைகளான கூகுள் 'எப்ஸ்', கூகுள் 'வொயிஸ்', கூகுள் 'ரீடர்' மற்றும் 'ஐ' கூகுள் போன்றவற்றின் பாவனையாளர்களைத் தனது கூகுள் 'மீ' தளத்திற்கான இலக்காக கூகுள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் கூகுள் 'பஸ்', 'ஓர்குட்' ஆகிய சமூக வலைபின்னல் தளங்களை உருவாக்கி தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'பேஸ்புக்'கின் பிரமாண்ட வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மற்றைய தளங்களின் எண்ணிக்கை என்பன கூகுளின் இன்னும் அறிவிக்கப்படாத கூகுள் 'மீ' தளத்தின் வெற்றிக்குப் பெரும் சவால்களாக விளங்குகின்றன.

VK

Leia mais...

Aug 8, 2010

உங்கள் ஈமெயில்கள் படிக்கப்பட்டதா? எங்கிருந்து படிக்கப்பட்டது?

சில நேரங்களில் முக்கியமான ஈமெயில்களை அனுப்பிவிட்டு நீங்கள் பதிலுக்காக காத்திருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பிய ஈமெயில்களுக்கு பதில் ஏதும் வராமல் இருக்கலாம், அவருக்கு மீண்டும் ஈமெயில் மூலம் நினைவுறுத்தலாமா? அவர் அந்த மெயிலைப் படித்திருப்பாரா? மாட்டாரா? என்பது போன்ற கேள்விகள் எழலாம். இது போன்ற நேரங்களில் இவற்றை நாம் எப்படி அறிந்து கொள்வது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

இது போன்று மெயில் எங்கிருந்து படிக்கப்பட்டது என்று அறியவேண்டிய சூழ்நிலை வேறு காரணங்களுக்கு ஆகவும் ஏற்படலாம். இவற்றை தெரிந்து கொள்வதற்காகவே இரண்டு தளங்கள் செயல்படுகின்றன. முதலில் spypig.com  தளம். இத்தளத்தில் நம்முடைய ஈமெயில் முகவரி மற்றும் மெசேஜ் டைட்டில் ஆகியவற்றை உள்ளிட்டு நமக்கு விருப்பமான ஒரு image ஐ select செய்து கொள்ளவேண்டும். இந்த image நம்முடைய ஈமெயிலுடன் இணைத்து அனுப்பப்படும். ஆனால் image தெரியாதவாறு blank ஆன image ஐயும் அனுப்பலாம். இங்கு எத்தனை முறை படிக்கப்படும் வரை தெரியவேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம். பின்னர் click to activate my spypig என்பதில் கிளிக் செய்து activate செய்துகொள்ளவேண்டும். பின்னர் நீங்கள் செலக்ட் செய்த image ஐ copy செய்து 60நொடிகளுக்குள் அனுப்பவேண்டிய ஈமெயிலில் paste செய்து send கொடுத்துவிடுங்கள். இனி நீங்கள் அனுப்பிய இந்த மெயிலை open செய்யும் போதெல்லாம் உங்களுக்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் எங்கிருந்து படிக்கப்பட்டது? எப்போது படிக்கப்பட்டது? அவர் பயன்படுத்தும் browser, அவருடைய service provider உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறலாம். இச்சேவை முழுவதும் இலவசம் registrationனும் தேவையில்லை.

ஆனால் spypig இல் படிக்கப்பட்ட இடம் சில  நேரங்களில் துல்லியமாக இருப்பதில்லை எனவே துல்லியமாக அறிந்து கொள்ள அவர்கள் அனுப்பும் ஈமெயிலில் recipient ip என்றிருக்கும் ip address ஐ copy செய்து  தளத்தில் உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம். மற்றொரு தளமான,  தளத்தில் image எதையும் உள்ளிட தேவையில்லை. இங்கு நீங்கள் register செய்து கொள்ள வேண்டும். பின்னர் track செய்ய வேண்டிய ஈமெயிலின் முகவரியில் .readnotify.com என இட்டு அனுப்பவேண்டும். இதனை பெறுபவர் காண இயலாது. எனவே நீங்கள் track செய்வதை அவர்கள் அறிந்து கொள்ள முடியாது. இச்சேவையில் முதல் இருபத்தி ஐந்து மெயில்கள் வரை இலவசமாக track செய்து கொள்ளலாம். இதற்க்கு மேல் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும்.

- வாசு

Leia mais...

Aug 7, 2010

மொபைல்போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூச‌ன்ஸ்

மொபைல் போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூச‌னை இன்னும் 12 மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக மேக்ஸ் செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த மேக்ஸ் செக்யூர் சாப்ட்வேர்ஸ் நிறுவன நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சய் பிரதான் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :

மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் இதுவரை, தங்கள் மொபைல் போன்களை கம்ப்யூட்டரின் துணையுடன் ஆன்டிவைரஸ் சாப்டவேரின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்ததாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, இன்னும் 12 மாதங்களில் மொபைல் ‌போன்கள் தங்களுக்குள்ளேயே ஸ்கேன் செய்யும் அளவிற்கு ஆன்டி வைரஸ் சொல்யூசனகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, இந்த நிதியாண்டில் 100 பே‌ரை புதிதாக பணியமர்த்த உள்ளதாக சஞ்சய் பிரதான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Leia mais...

Aug 6, 2010

பேஸ்புக் - டுவிட்டர் நிறுவனங்களின் புதிய எதிரி

பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலை பின்னல் தளங்களில் அதிக நேரம் விரயம் செய்யும் ஊழியர்களினால் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பில்லியனளவில் பணவிரயமேற்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

பிரித்தானிய இணையத்தளமொன்று நடத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவின்படி பிரித்தானியாவின் 34 மில்லியன் ஊழியப்படையில் 2 மில்லியன் பேர் 1 மணித்தியாலத்திற்கும் அதிகமான தங்களது வேலை நேரத்தை மேற்படி சமூக வலை பின்ணல் தளங்களில் செலவிடுவதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. இது மொத்த வேலை நேரத்தில் 8 இல் 1 பங்காகும்.

மேற்படி இணையதளத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கருத்துப்படி ஐக்கிய இராச்சியத்தில் ஊழியர்கள் மிகவும் அதிக நேரத்தினை சமூக வலை பின்னல் தளங்களில் செலவிடுவதாகவும், இது நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் இது ஊழியர்களின் ஆக்கத்திறனில் மறைமுக பாதிப்பை எற்படுத்துவதாகவும் இதனால் நிறுவனங்கள் பல்வேறு நட்டங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

ச.கவிந்தன்

Leia mais...

Aug 5, 2010

' ஐ போன் ' உடன் மோதவுள்ள பிளக்பெரி டோர்ச் 9800

கையடக்கத் தொலைபேசி சந்தையில் அதிகரித்துவரும் அப்பிளின் ' ஐ போன் ' வகை தொலைபேசிகளின் ஆதிக்கத்தை கருத்தில் கொண்டும் சந்தையில் இழந்துவரும் தங்களது இடத்தினை மீண்டும் தக்கவைத்துகொள்ளும் நோக்குடனும் பல்வேறு நிறுவனங்கள் தமது நவீன கையடக்கதொலைபேசிகளை வெளியிட்டு வருகின்றன.

இந் நிலையில் ஆர்.ஐ.எம் நிறுவனம் தனது புதிய பிளக்பெரி கையடக்கதொலைபேசியை நேற்று அறிமுகம் செய்தது.

ஆர்.ஐ.எம் என்றறியப்பட்ட 'ரிசேர்ச் இன் மோசன்' நிறுவனம் கனடா நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மற்றும் கம்பி இல்லா சாதன தயாரிப்பு நிறுவனமாகும். மேற்படி நிறுவனமே தற்போது பிளக்பெரி கையடக்கதொலைபேசிகளை உருவாக்கி வருகின்றது.

' பிளக்பெரி டோர்ச் 9800 ' என இப் புதிய கையடக்கதொலைபேசி பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி கையடக்கதொலைபேசியை கடந்த 18 மாதகாலமாக அந் நிறுவனம் உருவாக்கி வந்தது.

மேற்படி தொலைபேசியானது அந்நிறுவனத்தின் 3வது தொடுந்திரையுடன் கூடிய வெளியீடு என்பதுடன் முதலாவது ' ஸ்லைட் அப் ' எனப்படும் மேல்நோக்கி தள்ளக்கூடிய அமைப்பினை கொண்ட வெளியீடாகும்.

மேலும் பிளக்பெரி ' ஒஸ் 6 ' எனப்படும் அதி நவீன இயங்கு தளத்தினை கொண்டியங்கவுள்ள முதலாவது கையடக்கத்தொலைபேசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

3.2'' எச்விஜிஎ + (480X360 பிக்ஸல்ஸ்) திரையுடன் கூடியதும், 3ஜீ, வை-பை பி.ஜீ.ன், ப்ளூடுத் மற்றும் ஜிபிஸ் ஆகிய வசதிகளையும் 5 மெகா பிக்ஸல் கமெராவையும் வீடியோ வசதியையும் கொண்டதாகும்.

512 எம்பி ஒபரேட்டிங் மெமரியை கொண்டுள்ளதுடன். 4 ஜிபி சேமிப்பு வசதியையும் கொண்டது மேலும் இதன் சேமிப்பு வசதி 16 ஜிபி வரை அதிகரிக்கப்படக்கூடியதாகும்.

இவ் வெளியீடானது அப்பிளின் ' ஐ போன் ' இற்குத் தகுந்த போட்டியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சவூதி அரேபியாவில் பிளக்பெரி கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளதும் ஐக்கிய அரபு இராஜ்சியமும் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் தமது நாடுகளிலும் பிளக்பெரிக்கான தடையை விதிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ச.கவிந்தன்.

Leia mais...

Aug 4, 2010

அகரவரிசை கீ போர்டுடன் மொபையில் போன் அறிமுகம்

பட்ஜெட் விலையில், குவெர்ட்டி கீ போர்டுடன் கூடிய இரண்டு சிம் மொபைல் போன்கள், இன்றைய நிலையில் மொபைல் சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில் லாவா நிறுவனம், அகர வரிசை கீ போர்டுடனும் தன் லாவா 2 மற்றும் லாவா 5 மாடல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

விரும்புபவர்களுக்கு குவெர்ட்டி கீ போர்டுடனும் இந்த போன்கள் கிடைக்கின்றன. பொதுவாக குவெர்ட்டி கீ போர்டு டைப்ரைட்டிங் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கூடுதல் வசதி அளித்து வருகிறது. மற்றபடி டைப்ரைட்டிங் தெரியாதவர்களுக்கு, அகரவரிசையில் கீ போர்டு இருப்பது, உதவியாய் உள்ளது. இதனை அறிந்த லாவா நிறுவனம், மிகச் சரியாக அகரவரிசை கீ போர்டுடன், மொபைல்களை வடிவமைத்துத் தருகிறது.

இவை இரண்டிலும் 2.2 அங்குல டி.எப்.டி. ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் இரண்டு சிம்களைப் பயன்படுத்தும் வசதி, எப்.எம். ரேடியோ, புளுடூத், மொபைல் ட்ரேக்கர் , எல்.இ.டி. டார்ச் ஆகியன தரப்படுகின்றன. இவற்றில் லாவா பி5 மாடலில், 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதில் உள்ள மியூசிக் பிளேயர் MP3, MP4, AVI, 3GP, MIDI மற்றும் AMR ஆகிய பார்மட்களை சப்போர்ட் செய்கிறது.

ஆனால் பி2 மாடலில் 1800mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதனால் பல நாட்கள் போனை சார்ஜ் செய்திடாமல் பயன்படுத்த முடிகிறது. பி 5 மாடலில் 1400mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. லாவா பி2 விலை ரூ.3,999 மற்றும் லாவா பி5 ரூ. 4,399 எனக் குறியிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

Leia mais...

Aug 3, 2010

மோட்டாரோலாவின் பட்ஜெட் போன்கள்

பல விலை மலிவான மொபைல் போன்கள் வருகையால், தன் மார்க்கட்டினை இழந்து வரும் நிலையில், மோட்டாரோலா நிறுவனம் மீண்டும் தன் இடத்தைப் பிடிக்க, ஐந்து, பட்ஜெட் தொடக்க நிலை மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டாயுவா என்ற பெயரில் இவை வந்துள்ளன.

இவற்றின் விலை ரூ.1,490 முதல் ரூ. 2,890 வரை உள்ளன. இந்த மாடல்கள் WX181, WX260, WX265, WX290 மற்றும் WX295 என்ற எண்களுடன் கிடைக்கின்றன. இவற்றில் மிக மலிவானது WX181 ஆகும். இதன் விலை ரூ. 1,490. இதில் மெமரி ஸ்லாட் இல்லை. WX260 மாடலில் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளது. 2ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

எப்.எம். ரேடியோ பிளேயர், வண்ணத்திரை உள்ளன. இரண்டு அலை வரிசையில் இயங்கும் இந்த மாடலில் ஜி.பி.ஆர்.எஸ் வசதியும் தரப்பட்டுள்ளது.WX265 மாடல் ஒரு பிளிப் போன் ஆகும். புளுடூத் இணைப்பு உள்ளது. இவற்றில் WX290 ஒரு அட்வான்ஸ்டு மாடல் போனாகும். மாடலில் விஜிஏ கேமரா ஒன்று தரப்பட்டு ள்ளது.

எப்.எம்.ரேடியோ மற்றும் இரண்டு டிஸ்பிளே இந்த போனின் சிறப்பாகும். வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொபைல் சந்தையில், ஒவ்வொரு நிறுவனமும் தன் பங்கினைக் குறையவிடாமல் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. அந்த வகையில் மோட்டாரோலாவின் இந்த மாடல்கள் இந்நிறுவனத்திற்குக் கை கொடுக்குமா என்று காணலாம்.

Leia mais...

sonyயின் புதிய தொழில்நுட்பம்!!!

சோனி நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. டோக்கியோவை மையமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் தான் இறங்கிய தளங்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டிவருகிறது. அதிலும் குறிப்பாக சோனி அறிமுகப்படுத்திய walkman ஒரு புரட்சியையே உருவாக்கியது. made in japan என்ற வார்த்தைகளுக்கு ஒரு மரியாதையையே ஏற்படுத்தியது எனலாம். இந்நிறுவனம் தற்போது  ஒரே நேரத்தில் இரண்டு சேனல்களை பார்க்க கூடிய வகையில் அறிமுகப்படுத்தவிருக்கும் TVயை பற்றித்தான்.

நீங்கள் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்பும்போது, உங்கள் வீட்டில் வேறு எதாவது திரைப்படங்கள் போன்ற நிகழ்சிகளை பார்க்கவிரும்புவார்களா? remote யார் வைத்திருப்பது என்பதில் சண்டை வருமா? அப்படியானால் சோனி அறிமுகப்படுத்தவிருக்கும்  புது TV உங்களுக்கு தான். இந்த tv இல் ஒரே நேரத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அவரவர்களுக்கு விருப்பமான வேறுபட்ட இரு நிகழ்சிகளை கண்டு ரசிக்கலாம்.

இது எப்படி சாத்தியமாகிறது? இதற்க்கு நீங்கள் பிரத்தியேகமான கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். இந்த கண்ணாடிகளை டிவியின் frame rateக்கு ஏற்ப sync செய்வதன் மூலம் விருப்பமான சானல்களை பார்க்க முடியும். மேலும் இது multiplayer gameகளில் அவரவர் viewpointகளை பார்த்து விளையாட முடியும். இது 3D தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் நீட்சி தான். இத்தொலைக்காட்சிக்கான patent ஐ சோனி நிறுவனம் தற்போது பெற்றிருக்கிறது.

விரைவிலேயே இதை சந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். அதுவரை பொறுத்திருங்கள்.

வாசு

Leia mais...

Aug 2, 2010

மீண்டும் ஆக்கிரமிக்கும் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்'

பிரபல கணனி இயங்குதளமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' உலகளாவியரீதியில் அதிகமாக உபயோகிக்கப்படும் கணனி இயங்குதளமாக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி மற்றைய முன்னணி இயங்குதளங்களான ' மொஸிலா பயர் பொக்ஸ் ' மற்றும் ' கூகுள் குரோம் ' ஆகியவற்றை ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' பின்தள்ளியுள்ளது.

மேலும் உலகில் வேகமாக வளர்ந்துவரும் இயங்குதளமாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' தொகுப்பு விளங்குகின்றது.

புதிய இணைய அறிக்கைகளின் படி மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' இன் இயங்குதள சந்தைப்பங்கு ஜூலை மாதமளவில் 0.42 % வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி இயங்குதள சந்தையில் அதன் மொத்த பங்கு 60.74% வீதமாகவுள்ளது.

அதற்கு அடுத்த இடங்களிலுள்ள ' பயர்பொக்ஸ் ' மற்றும் ' கூகுள்குரோம் ' இயங்குதளங்களின் சந்தைப்பங்குகள் முறையே 0.9% மற்றும் 0.08% வீதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந் நிலையில் அப்பிளின் ' சபாரி ' இயங்குதளத்தின் சந்தைப்பங்கு 0.24% வீதத்தினால் அதிகரித்துள்ளது.

அனைவரும் எதிர்ப்பார்க்காதவகையில் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' இயங்குதளத்தின் உலகளாவிய பாவணை 0.98% வீதத்தினால் அதிகரித்துள்ளதோடு இதன் மொத்த உலகளாவிய பாவணைவீதம் 30% உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leia mais...

பிளக்பரி கையடக்கத் தொலைபேசிகளின் சில தொழிற்பாடுகளுக்கு அரபு நாடுகளில் தடை

உலகின் முன்னணி கையடக்கத் தொலைபேசிகளில் ஒன்றாகக் கருதப்படும் பிளக்பரி தொலைபேசிகளின் சில தொழிற்பாடுகளுக்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சவூதி அரேபியா மற்றம் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றில் பிளக்பரி கையடக்கத் தொலைபேசியின் சில தொழிற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளக்பரி கையடக்கத் தொலைபேசியின் சில தொழிற்பாடுகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இணைய பாவனை மற்றும் மின் அஞ்சல் பாவனைகளுக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

ஹெட் செற்களின் ஊடாக இணைய பாவனை மேற்கொள்ளப்படும் போது அவற்றை கண்காணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இதனால் இந்த தொழிற்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 500,000 பிளக்பரி பாவனையாளர்களும், சவூதி அரேபியாவில் 400,000 பிளக்பரி பாவனையாளர்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leia mais...

Aug 1, 2010

' ஐ பேட் ' இற்குப் போட்டியாக மைக்ரோசொப்ட்

உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அப்பிளின் பிரபல ' ஐ பேட் ' ரக கணனிகளுக்குப் போட்டியாக ஒரு கணனியை உருவாக்கி வருவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தாம் எச்பி,லெனோவோ,எசூஸ்,டெல் மற்றும் டொஷிபா போன்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

அத்துடன் தமது மென்பொருள் வல்லுநர்களுடன் சேர்ந்து கடுமையாக உழைத்து வருவதாகவும் கூடிய விரைவில் மக்களின் தேவைக்கேற்ற விதத்தில் இது சந்தைக்கு வருமெனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மைக்ரோசொப்ட் கொரியர் எனப்படும் இரட்டைத் திரைகளைக் கொண்ட கணனிகளை அதன் வல்லுநர் குழுவொன்று இரகசியமாக உருவாக்கி வருவதாகவும் தகவல் கசிந்திருந்தது.

ஆனால் இது தாம் உருவாக்கிவரும் பலவகையான கணனிகளில் ஒரு வகை மட்டுமே என மைக்ரோசொப்ட் அண்மையில் தெரிவித்திருந்தது.

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo