கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jul 31, 2010

தரமான புதிய பாடல்களை (320kbps) தரவிறக்கம் செய்வது எப்படி?

புதிய பாடல்களை தரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நான் மகான் அல்ல பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் இவ்வாறு தட்டச்ச வேண்டும் naan mahaan alla 320kbps  vbr  இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும். அதாவது முதலில் நீங்கள் தேட விரும்பும் பாடலின் படம் பெயர் அல்லது வெறும் பாடலின் பெயர் பிறகு 320kbps கடைசியில் vbr அவ்வளவுதான்.

சரி, இப்பொழுது அந்த 320kbps என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்

Kbps என்றால் kilo bits per second என்று அர்த்தம். அதாவது ஒரு பாட்டை தரம் பிரிப்பது ஆகும். உதாரணத்திற்கு பெரும்பாலான பாட்டுக்கள் 128kbps அளவில் இருக்கும். அவை யாவும் 4 அல்லது 5mb கணக்கில் காணப்படும். இதுவே அது 320kbps அளவில் இருந்தால் அது எட்டு முதல் பதினைந்து mb-யில் காணப்படும்.ஆனால் ஒரு பாட்டுக்கு இவ்வளவு இடமா? என்ற கேள்வி உங்களிடத்தில் எழும் அதனால் தான் நான் உங்களை கூகிளில் vbr (various bit rate) என்று தேடச்சொன்னேன்! இவ்வாறு தேடுவதால் ஒரு பாடல் ஆறு mb-யில் முடிவடைந்துவிடும்.

சின்ன பையன்

Leia mais...

Jul 30, 2010

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை

இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை “நடமாடும் நோய்க்கூடம்” என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.

செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது.

அதில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிந்தது.

அதாவது கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது. ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா உள்ளது.

மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீரியாக்கள் உள்ளன.

அசுத்தமான செல்போன்களை பயன்படுத்தும்போது அதன்மூலம் கிருமிகள் நமது உடலில் புகுந்து வயிற்று உபாதை, மூச்சு கோளாறு போன்ற பல்வேறு நோய்களும் தாக்குகின்றன.

Leia mais...

Jul 29, 2010

100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிவு

அண்மையில் அமெரிக்க உளவுத்தகவல்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம்.

தற்போது த பைரட் பே என்ற இணையத்தளத்தில் 100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருங்கே திரட்டி தரவிறக்குவதற்கேற்ற வகையில் வெளியிட்டுள்ளனர். 

இவ்வளவு தகவல்களையும் வெளியிட்டவர் thepiratebay.org  இணையத்தளத்திற்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் Ron Bowes என்பவரே ஆவார்.

பேஸ்புக்கின் பிரைவசி செட்டிங்க் மூலமாக தனது தனிப்பட்ட தகவல்களை மறைத்து வைக்காதவர்களிடமிருந்தே அவர்களது தகவல்களை திரட்டியதாக Ron Bowes  தெரிவித்தார் எனவும் இதற்காக விஷேட கணனி நிரலிகளை உருவாக்கி அதைக்கொண்டு எல்லா பேஸ்புக் புரொவைலையும் ஸ்கான் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை பிரைவசி செட்டிங்க் மூலம் மாற்றங்கள் செய்து பாதுகாப்பாக வைக்காதவர்கள் இனிமேல் மாற்றியும் பலனில்லை என்றும் தெரியவருகிறது.

இந்த குற்றச்சாட்டுக்களை பலமாக மறுத்த பேஸ்புக் இவ்வாறு இணையத்தில் கசிந்த தகவல்கள் ஏற்கனவே ஆன்லைனில் இருப்பவைதான் என்று தெரிவித்துள்ளது.

தெரிந்த நண்பரின் தகவலை வைத்து பேஸ்புக்கில் தேடும்போது கிடைக்க கூடிய தகவல்களே இவை என்றும் பேஸ்புக் தெரிவித்தது. அண்மையில் தான் பேஸ்புக் சுமார் அரை பில்லியன் பாவனையாளர்களை எட்டியது.

Leia mais...

' மைஸ்பேஸ் ' இன் அதிரடி நடவடிக்கை

' மை ஸ்பேஸ் ' என்பது பேஸ்புக் பிரபலமடையும் முன்னர் பலரின் விருப்பத்திற்குரிய சமூகவலைப்பின்னல் தளமாக இருந்தது.

எனினும் பேஸ்புக்கின் அபாரவளர்ச்சி ' மை ஸ்பேஸ் ' ஐ பின்தள்ளியது. மீண்டும் இழந்த தனது முதலிடத்தை அடைவதற்கு அத்தளமானது இவ் வருடம் மீள்வெளியீடு செய்யப்படவுள்ளது.

இத் தகவலை அதன் தற்போதைய உரிமையாளரான ' நியூஸ் கோர்ப் ' நிறுவனம் அறிவித்துள்ளது.

' நியூஸ் கோர்ப் ' என்பது உலகின் 2ஆவது மிகப் பெரிய ஊடக பல்கூட்டுத்தாபன நிறுவனமாகும். மேற்படி நிறுவனம் 2005ஆம் ஆண்டில் இச் சமூகவலைப்பின்னல் தளத்தினை 580 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்தது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த ' நியூஸ் கோர்ப் ' நிறுவன உயர் அதிகாரியொருவர் பேஸ்புக் 500 மில்லியன் பாவனையளர் இலக்கினை எட்டியுள்ள போதிலும் ' மை ஸ்பேஸ் ' உலகளாவிய ரீதியில் தற்போதும் பிரபலமாகவுள்ளது.

மேலும் மாதமொன்றிற்கு அமெரிக்காவில் மாத்திரம் 65 மில்லியன் முதல் 70 மில்லியன் வரையிலான நிரந்தர பாவனையளர்களைக் கொண்டிருப்பதாகவும். இன்னும் அதன் பாவனையாளர்கள் உலகம் முழுவதிலும் காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

' மைஸ்பேஸ் ' இனிமேல் புதிய இசைக்கலைஞர்களுக்கு தங்களின் படைப்புகளை பிரபலப்படுத்த வாய்ப்பளிக்கவுள்ளதாகவும், முற்றுமுழுதாக இளைஞர்களை குறிவைத்துள்ளதாகவும், இதன் புதிய வடிவம் இளமை ததும்பும் வகையில் காணப்படுமெனவும் , கணனி விளையாட்டுகளுக்கென அதிக கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந் நடவடிக்கையானது ' மைஸ்பேஸ் ' மற்றும் பேஸ்புக் இடையேயான போட்டித்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.

Leia mais...

Jul 28, 2010

கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால் கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும். நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம், கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில் “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.

மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, “சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

Leia mais...

Jul 27, 2010

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.

பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.

மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.

Leia mais...

Jul 26, 2010

ஈமெயில் accountகளை hackerகளிடமிருந்து பாதுகாக்க..

ஈமெயில் முடக்கப்படும் போது தொடர்புகள் மட்டும் துண்டிக்கப்படுவதில்லை, பலரும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் (gmail account ஐ புகைப்படங்களை back up செய்யவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் இங்கு picasaவும் முடக்கப்படும்) பேங்க் மற்றும் வணிக தகவல்களையும் இழக்கிறார்கள். இவற்றை தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

முதலில் personal settings இல் password recovery option இல் alternative email address மற்றும் password reset code ஐ பெற மொபைல் நெம்பரையும் கொடுங்கள். ஆனாலும் hackerகள் ஈமெயிலுக்கான password ஐ பெற்ற உடனேயே இத்தகவல்களையும் மாற்றிவிட முடியும் என்றாலும் கொள்ளையடிக்க போன இடத்தில் காது கேட்க்காததால் முகமூடியை கழற்றிவிட்டு பேசி மாட்டிக்கொண்டதை போல வாய்ப்புகள் கிடைக்கலாம். அப்படியிருந்தால் இங்கு password reset செய்ய முயலலாம். அப்படி அத்தகவல்களும் மாற்றப்பட்டிருந்தாலும், இந்தப் பக்கத்தில் உள்ள form ஐ நிறைவு செய்து submit செய்வதன் மூலம் உங்கள் account இல் unusual activities இருந்தால், hackerகள் பயன்படுத்த இயலாதவாறு முடக்கப்படும். முடிந்தவரை அப்பக்கத்தில் சரியான தகவல்களை அளிப்பதன் மூலம் உங்கள் account ஐ பெற வாய்ப்புகள் உண்டு. தகவல்கள் முழுமையாக தெரியாவிட்டாலும் முடிந்தவரை நெருக்கமான தகவல்களை அளிக்கலாம்.

நம் passwordகள் keylogger, spywareகள் மூலமே திருடப்படுவதால் நல்ல அன்டி வைரஸ் மற்றும் அன்டி ஸ்பைவேர்களை அப்டேட் செய்து பயன்படுத்துவதன் மூலம் password திருட்டை ஓரளவிற்கு தடுக்கலாம். மேலும் நாம் நீண்ட காலம் பயன்படித்திவரும் மெயில் முகவரிகள் திடீரென நம் கம்ப்யூட்டர்கள் infect ஆவதால் அதன் மூலமே passwordகள் திருடப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வாறு இடையிலேயே திருடப்படுவதாலும், security questionக்கான பதிலை நாம் பெரும்பாலும் மீண்டும் மீண்டும் உள்ளீடு செய்ய தேவை இல்லை என்பதாலும் hackerகளுக்கு security questionக்கான பதில் தெரிய வாய்ப்புகள் இல்லை. password தெரிந்தால் security question ஐ மாற்றிக்கொள்ளலாம் என்றாலும் ஏற்க்கனவே இருக்கும் questionக்கு பதில் காண்பிக்கப்படாது. எனவே இங்கு நாம் password ஐ மாற்றும்போது பழைய password ஐயும் உள்ளிட்டு பின் புது password மாற்றுவது போல security questioin ஐயும் மாற்ற ஏற்க்கனவே இருக்கும் questionக்கான பதிலையும் உள்ளீடு செய்ய வேண்டும் என்பது போல் இருந்தால் hackerகளுக்கு இந்த பதிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவற்றை மாற்ற இயலாமல் போகும். இதனால் நாம் password ஐ reset செய்ய மாற்றப்படாத securty questionக்கான பதிலை நம்மால் உள்ளீடு செய்து பெற முடியும்.

ஆனால் security question ஐ மாற்ற அதற்க்கான பதிலை உள்ளிட வேண்டும் என்ற வசதி தற்போது gmailஇல் இல்லை. ஆனால் gmailஇல் புது வசதிகளை சேர்க்க நாம் புது புது வசதிகளை suggest செய்ய இயலும். இதற்கான பக்கத்தில் பிரிவுவாரியாக உள்ள list இல் உள்ளவற்றையும் suggest செய்யலாம். வேறு ஐடியாக்கள் நம்மிடமிருந்தால் I have another idea எனும் பகுதியில் நாம் இந்த வசதியை suggest செய்யலாம். அதிகமானவர்கள் இதை suggest செய்வதன் மூலம் இவ்வசதி நமக்கு விரைவாக கிடைக்கலாம். எனவே ஜிமெயிலுக்கான் புது வசதியாக இதை முடிந்தவரை அனைவரும் suggest செய்யலாம். இதன் மூலம் பெரும் அளவிலான ஈமெயில் திருட்டுக்களை தவிர்க்க முடியும். I have  another idea பகுதியில் இதை நீங்கள் suggest செய்யலாம்.

gmailஇல் suggest செய்ய

வாசு

Leia mais...

Jul 24, 2010

35 டொலரில் ஒரு கணினி :இந்தியா புரட்சி

அனைவருக்கும் கணினி எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலகின் மிகவும் மலிவான கணினியைத் தாம் தயாரித்து வருவதாக இந்திய ஊடகத் தகவல் நிலையம் தெரிவிக்கின்றது.

இதன் விலை வெறும் 35 டொலர் மட்டுமே எனவும் மாணவர் நலன் கருதி இவ்விலை 20 டொலர் முதல் 10 டொலர் வரை குறையலாமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கணினியானது தொடு திரையுடன் கூடியதாகக் காணப்படுமெனவும் இதனுள் பல மென்பொருட்கள் மற்றும் வசதிகள் உள்ளடங்கியிருக்குமெனவும் வெப் பிரவுசர், பிடிஎப் ரீடர், மீடியா பிளேயர், வீடியோ கொன்பிரன்ஸ் மற்றும் புகைப் படமெடுக்கும் வசதி என்பன இதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இக்கணினி 2011ஆம் ஆண்டளவில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் முக்கிய நோக்கம் இந்திய கல்லூரி மாணவருக்கிடையில் பாடவிதான ரீதியில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதாகும்.

2,127 டொலர் நாநோ கார், 2000 டொலர் திறந்த இதய சத்திர சிகிச்சை மற்றும் 16 டொலர் நீர் சுத்தப்படுத்தும் கருவி போன்ற மலிவான இந்திய உற்பத்தி வரிசையில் இதுவும் இந்திய வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துமென அவதானிகள் கருத்து தெரிவிகின்றனர்.

Leia mais...

Jul 23, 2010

பயர்பாக்ஸ் ஸ்பெல் செக்கர்

அநேகமாக அனைத்து டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களிலும், ஆங்கில எழுத்துப் பிழைகளைத் திருத்த ஸ்பெல் செக்கர் தரப்படுகிறது. இணையத்திலும் நாம் அதிகமான அளவில் டெக்ஸ்ட் அமைக்கிறோம்.

பல படிவங்களில் நம் குறிப்புகளைத் தர வேண்டியுள்ளது; ப்ளாக்குகள் என்னும் வலைமனைகளை அமைக் கிறோம்; போரம்கள் எனப்படும் மன்றங்களில் நிறைய எழுதுகிறோம். இவற்றில் எழுதுகையிலும் நமக்கு ஒரு ஸ்பெல் செக்கர் தேவைப்படுகிறது.

அப்படியானால், பிரவுசரிலும் ஒரு ஸ்பெல் செக்கர் வேண்டுமே? இருக்கிறதா என்றால், அதிசயப்படத்தக்க வகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மட்டுமே இந்த வசதியைக் கொண்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8க்கு இன்னும் முழுமையான ஸ்பெல் செக்கர் இல்லை. விரைவில் வர இருப்பதாகத் தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பயர்பாக்ஸ் பிரவுசரில் எப்படி ஸ்பெல் செக்கரை இயக்குவது எனப் பார்க்கலாம். வழக்கமாக, பயர்பாக்ஸ் பிரவுசரை இன்ஸ்டால் செய்திடுகையிலேயே, இந்த வசதியும் இயக்கப்படுகிறது. ஏதேனும் செட்டிங்ஸ் மாற்றங்களினால், ஸ்பெல் செக்கர் இயங்கவில்லை என்றால், கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைப்பினை மேற்கொள்ளவும்.

முதலில் Tools>Options>Advanced எனச் செல்லவும். கிடைக்கும் டேப்களில் “General”என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Check my spelling as I type என்ற வரிக்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை எனில் அங்கு உள்ள கட்டத்தில் கிளிக் செய்து ஏற்படுத்தவும்.

பின்னர் ஓகே கிளிக் செய்து டூல்ஸ் மெனுவினை மூடிவிட்டு, ஏதேனும் டெக்ஸ்ட் அமைத்துச் சோதனை செய்து பார்த்தால், ஸ்பெல் செக்கர் அமைக்கப்பட்டிருப்பது தெரியவரும்.

Leia mais...

Jul 22, 2010

500 மில்லியன் இலக்கினை எட்டும் பேஸ்புக்

பிரபல சமூகவலைப்பின்னல் தளமான பேஸ்புக் 500 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை அடையவுள்ளதாகவும் அவ்வறிவிப்பை பெரும்பாலும் இந்த வாரம் மேற்கொள்ளுமெனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத் தொகையானது உலக சனத்தொகையின் 8% வீதமாகும்.

இம் மைல்கல்லை கொண்டாடும் வகையில் " பேஸ்புக் கதைகள் " எனும் விசேட கதைத் தொகுப்பையும் அவ் வலையமைப்பு வெளியிடவுள்ளது. மேற்படி தொகுப்பானது பாவனையாளர்களின் வாழ்க்கையை பேஸ்புக் எவ்வாறு மாற்றியுள்ளது என்பது தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

அனைத்து பாவனையாளர்களும் தங்கள் கதைகளை சமர்ப்பிக்கமுடியும். பாவனையாளர்களால் விரும்பப்படும் அதிகமான கதைகள் இத்தொகுப்பினுள் உள்ளடக்கப்படும். பேஸ்புக் தனது வலையமைப்பினை 150 மில்லியன் பேர் கையடக்க தொலைபேசிகள் மூலம் உபயோகிப்பதாக சமீபத்தில்அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேஸ்புக் வலையமைப்பின் சந்தைப்படுதல் இயக்குனர், இது தாம் ஏற்கனவே எதிர்பார்த்தவொன்றெனவும் , இதை வேறு வேறுவிதமாக கொண்டாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பேஸ்புக் சமூகவலைப்பின்னல் தளமானது 2004ம் ஆண்டு மார்க் ஸுக்கர்பேர்க் என்பவரினால் அவரது சக மாணவர்களான எடுயுரடொ சவெரின் , டஷ்டின் மொஸ்கொவிட்ஷ் மற்றும் கிரிஷ் ஹக்ஷ் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.

Leia mais...

Jul 21, 2010

ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி?

ஈமெயில்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக ஆகிவிட்டன. மொபைல் மூலமே இப்போதெல்லாம் மெயில்களை கையாளுகிறார்கள். blackberry மொபைல்கள் இதற்காகவே பிரபலம் அடைந்திருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு செலவு அதிகம். மேலும் பலரும் மெயில்களை அலுவலக கணினி மூலமாகவும், இன்டர்நெட் மையங்கள் மூலமாகவுமே பார்க்கிறார்கள். நாம் கணிப்பொறியிலிருந்து தொலைவில் இருக்கும் போது மெயில் வந்திருக்கிறதாவென எப்படி அறிவது?

way2sms தளத்தில் இந்த வசதி இருந்தாலும் mail alertகளை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் activate செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எஸ்.எம்.எஸ் களை பெற இயலாது. இவற்றை நிரந்திரமாக மீண்டும், மீண்டும் activate செய்யாமல் பெறுவது எப்படி? இதற்க்கு windows live தளம் உதவுகின்றது.
login.live.com பக்கத்திற்கு சென்று windows live id மூலம் லாகின் செய்யுங்கள், அக்கௌன்ட் இல்லையென்றால் sign up செய்து உள்நுழையுங்கள், பின்னர் device பகுதியில் add phone கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர் ஐ உள்ளீடு செய்யுங்கள். இப்பொழுது உங்கள் மொபைலுக்கு verification code அனுப்பப்படும். code ஐ உள்ளிட்டு verify செய்துக்கொள்ளுங்கள். இனி இந்த முகவரிக்கு வரும் மெயில்கள் வந்தால் subject உடன் உங்களுக்கு sms அனுப்பப்படும். நீங்கள் default ஆக வேறு ஈமெயில் அட்ரஸ்களை பயன்படுத்துபவராக இருந்தால் அந்த முகவரியிலிருந்து windows live id முகவரிக்கு மெயில்களை forward செய்து கொள்ளுங்கள் இதன் மூலம் உங்கள் தற்போதைய முகவரிக்கு வரும் மெயில்களையும் sms மூலம் பெறமுடியும். gmail userகள் மெயிலை forward செய்ய settings சென்று Forwarding and POP/IMAP பகுதியில் Forward a copy of incoming mail to இல் ரேடியோ பட்டனை கிளிக் செய்து windows live id ஐ இடவும். இங்கும் உங்கள் மெயிலுக்கு verification code அனுப்பப்படும். அதனை verify செய்து விட்டால் இனி உங்கள் gmail மெயில்களுக்கும் sms அனுப்பப்படும்.

Vasu

Leia mais...

Jul 20, 2010

உங்கள் தகவலை ரகசியமாய் வைக்க QR Code தொழில்நுட்பம்

நம் தகவல்களை QR தொழில்நுட்பத்தின் வழியாக Encode செய்யலாம். QR என்பதின் விரிவாக்கம் Quick Response ஆகும். ஜப்பானிய தொழில்நுட்பமான இது உலகெங்கும் இன்று நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. Bar Code நாம் அனைவரும் அறிந்ததே. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியே இந்த QR Code ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் உங்களுடைய தகவலை QR Code ஆக Encode செய்தவுடன் அந்த படத்தை நீங்கள் எங்கு எதில் வேண்டுமானாலும் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம்.

அந்த படத்தை scan செய்து Decode செய்தால் அதில் உள்ள தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் நீங்கள் உங்கள் விலாசம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது ஐந்து வரி உள்ள ஒரு தகவல் என எந்த தகவலை வேண்டுமானாலும் நீங்கள் Encode செய்து கொள்ளலாம். ஏன் நம் தாய் மொழியாம் தமிழில் கூட அந்த தகவல் இருக்கலாம். இது போன்ற தகவலை உள்ளடக்கிய இந்த புகைப்படத்தை நம் கைபேசி(Mobile Phone or Cell Phone) ஐ கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியும் என்பது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம். QR Reader என்கிற மென்பொருளை இணையத்தில் தேடி உங்களுடைய கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள். என் நண்பர் வைத்துள்ள Nokia 5230 இல் வேலை செய்கிறது.

முதலில் இந்த சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய தகவலை Encode செய்யவும். பின்னர் இந்த சுட்டியை கிளிக் செய்து Decode செய்து பாருங்கள்.

புதுவை

Leia mais...

Jul 19, 2010

பயர்பாக்ஸ் பதிப்பு 4

மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சோதனை பதிப்புதான். யார் வேண்டுமானாலும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி, இதன் நிறை மற்றும் குறைகள் குறித்து மொஸில்லாவிற்குத் தெரிவிக்கலாம். முழுமையான பதிப்பு இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம். இதன் புதிய சிறப்பம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1.புதிய ஆட் ஆன் மேனேஜர்:
கூடுதல் வசதிகள் தரும் ஆட் ஆன் தொகுப்புகளுக்குப் பயர்பாக்ஸ் பிரவுசர் புகழ்பெற்றது. இவற்றைத் தனியே வைத்து நிர்வகிக்க புதிய வசதி தரப்பட்டுள்ளது. புதிய ஆட் ஆன் தொகுப்புகளை, நமக்கேற்ற வகையில் பிரவுசருடன் இணைக்கவும், தேவைப்படாத போது நீக்கவும் வழி தரப்பட்டுள்ளது. இருப்பினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இறுதி வெளியீட்டின்போது இதன் முழுமையான பயன்பாட்டு வடிவம் கிடைக்கும்.

2. வெப்–எம் பார்மட்:
ஹை டெபனிஷன் வீடியோ எனப்படும் உயர் வகை வீடியோ காட்சிகளை பிரவுசரில் யு–ட்யூப் வழியாகக் காண, எச்.டி. தன்மையுடன் கூடிய எச்.டி.எம்.எல். 5 வீடியோ தரப்பட்டுள்ளது.

3. தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு:
மொஸில்லா எப்போதும் தன் வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல்களைக் காப்பதில் முன்னுரிமை தரும். ஏற்கனவே உள்ள பிரவுசர் ஹிஸ்டரியில் பயன் படுத்தப்பட்ட வெப் வரையறைகள், பெர்சனல் தகவல்களைக் காப்பதில் சில குறைகளைக் கொண்டிருந்தது. அது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

4.முடங்கிப் போகாது:
பிரவுசரின் ப்ளக் இன் புரோகிராம் ஏதேனும் கிராஷ் ஆனால், பிரவுசரின் இயக்கம் முழுமையாக நின்று போய், மீண்டும் இயக்க வேண்டிய நிலையில் பிரவுசர் முடங்கிப் போகும். தற்போது இது களையப்பட்டுள்ளது. தொடர்ந்து தடையின்றி இன்டர்நெட் தேடலை மேற்கொள்ளலாம். அந்த பக்கத்தை மட்டும் மீண்டும் திறந்தால் போதும்.

5. இயங்கு திறன்:

பயர்பாக்ஸ் பிரவுசர் முதலில் தொடங்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. இதனையும், இணையப் பக்கங்கள் இறக்கிக் காட்டப்படும் நேரத்தினையும் மொஸில்லா கணிசமாகக் குறைத்துள்ளது.

6.தோற்றம்:
பிரவுசரைத் திறந்தவுடனேயே நம் கண்ணில் படுவது அதன் புதிய தோற்றமே. இணையத் தளங்களில் உள்ள தகவல்களுக்கு அதிக இடம் தரும் வகையில் டேப்கள் மேலே கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பயன்படுத்துபவரை வழி நடத்தும் இன்டர்பேஸ் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆப்பரா மற்றும் கூகுள் குரோம் பிரவுசர்களில் காணப்படும் சில அம்சங்களை, மொஸில்லா புதிய பதிப்பில் கொண்டு வந்துள்ளது எனக் கூறலாம். பல புதிய பட்டன்களும், ஒருங்கிணைந்த மெனுவும் தரப்பட்டுள்ளது. மெனுக்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் என்ற இடது ஓரம் உள்ள பட்டனுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கூகுள் குரோம் பிரவுசரில் இருப்பதைப் போல, டேப்கள் அனைத்தும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளன. கூகுளின் பிரவுசரில் இவை வட்டமாக இருக்கின்றன. இங்கே சரியான சதுரமாக உள்ளன. இருப்பினும் மெனுபார் தொடக்கத்தில் மறைத்துவைக்கப்படுகிறது. பயன்படுத்துபவர் விரும்பினால், அதனை பழைய பதிப்புகளில் இருந்தாற்போல வைத்துப் பயன்படுத்தலாம்.

7.புக்மார்க் பட்டன்:
சர்ச் பாக்ஸுக்கு அடுத்தபடியாக, புக்மார்க் பட்டன் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து புக்மார்க்குகளும் போல்டர்களும் நமக்குத் தேடிப் பார்க்க கிடைக்கின்றன.

8. தேவையான டேப் கிடைக்க: பல டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரை இயக்குகையில், நாம் செல்ல விரும்பும் தளம் எந்த டேப்பில் உள்ளது என்பதைக் காண நமக்குச் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்கான ஒரு தீர்வை இந்த பதிப்பு கொண்டுள்ளது. ஸ்மார்ட் லொகேஷன் பாரில், விரும்பும் தள முகவரி அல்லது அதன் தலைப்பு பெயரினை டைப் செய்து நேரடியாகவும், விரைவாகவும் அந்த தளத்திற்குச் செல்லலாம்.

9.விண்டோஸ் 7 ஒருங்கிணப்பு:
இந்த புதிய பதிப்பு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் முழுமையான முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. டேப்களின் பிரிவியூ மற்றும் ஜம்ப் லிஸ்ட் இதிலும் தரப்பட்டுள்ளது. டேப் பிரிவியூவில் திறக்கப்பட்டுள்ள அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பார்வையிடலாம். ஜம்ப்லிஸ்ட் மூலம் அடிக்கடி திறந்து காணும் தளங்களுக்கு எளிதாகச் செல்லலாம்.

10. வேகம்:
குரோம் மற்றும் ஆப்பராவுடன் ஒப்பிடுகையில், இந்த பதிப்பின் வேகம் குறைவாகவே உள்ளது. ஆனால் முந்தைய 3.6 பதிப்பினைக் காட்டிலும் வேகம் கூடுதலாக உள்ளது.

இந்த சோதனைப் பதிப்பில் இருக்கும் அனைத்தும், இறுதியாக வெளியிடப்படும் தொகுப்பில் கிடைக்கும் என்று உறுதி கூற முடியாது. இதனைப் பயன்படுத்து பவர்களின் கருத்துக்களின் அடிப்படை யிலேயே இறுதி வடிவம் முழுமையாக்கப்படும் என மொஸில்லா அறிவித்துள்ளது.

தரவிறக்கம் செய்ய

Leia mais...

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்

 மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய

Leia mais...

Jul 17, 2010

'அடோப் பிளாஷ்' அறிமுகப்படுத்தும் புதிய முப்பரிமாண புரட்சி

'அடோப் பிளாஷ்', இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும். உலகளாவிய ரீதியில் 20 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனை பாவித்து வருகின்றனர்.

'அடோப்' நிறுவனத்தின் அனைத்து மென் பொருட்களும் வெளியீடுகளும் வரைக்கலையில் (graphics) தனித்துவம் பெற்றவை. இந்த வரிசையில் அடுத்த வெளியீடாக முப்பரிமாண 'அடோப் பிளாஷ்' வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென சிறப்பு முப்பரிமாண (3D) கண்ணாடியையும் அது வெளியிடவுள்ளது. இவ்வெளியீடானது 'அடோப்' தனது அடுத்தக்கட்ட தொழில்நுட்பப் புரட்சிக்கு ஆயத்தமாக எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொழில்நுட்பமானது இணையத்தளங்களை வடிவமைக்கவுள்ள முப்பரிமாண தோற்றத்தில் பிரமாண்டமாக வடிவமைக்க உதவும். பாவனையாளர்கள் இதனைப் பார்வையிடும் போது, எழுத்து வரைகலை, காணொளிகள் மற்றும் கணினி விளையாட்டுக்கள் போன்றவற்றில் முப்பரிமாண அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இது தொடர்பான அந்நிறுவத்தின் சிறப்பு மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leia mais...

Jul 15, 2010

கூகிள் பரீட்சிக்கும் புதிய வசதி


நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குளை பாவிப்பவராயின் உங்களுக்கு இந்த செய்தி பஞ்சாமிர்தமாக இனிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே ப்ரவுசரில்(browser) இருந்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குகளை திறப்பதென்பது இதுவரை சாத்தியம் இல்லாமலே இருந்து வந்தது. அவ்வாறு ஒரே தருணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குகளை திறக்க வேண்டுமாயின் புதிய ப்ரவுசரை திறந்தே நமது அடுத்த கூகிள் கணக்கினை திறக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் தற்போதைக்கு கிடைத்திருக்கும் செய்திப்படி கூகிள் பல்கணக்கு திட்டம் ஒன்றை பரீட்சிப்பதாகவும் அது Gmail, Google Calendar, Google Reader, Google Docs, Google Sites and Google Code, ஆகிய சேவைகளில் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக செய்தியை இந்த முகவரிக்கு சென்று  பெற்றுக்கொள்ளவும்.

www.eseak.com

Leia mais...

Jul 14, 2010

ஐ-போன் 4ல் காணப்படும் குறைபாடு கண்டுபிடிப்பு

அப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ-போன் 4ல்(iphone 4) குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட consumer union எனும் அமைப்பு தனது consumer report எனும் சஞ்சிகையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால் புதிய ஐ-போன் 4 ன் இடது பக்க கீழ் மூலையில் காணப்படும் ஒரு சிறிய இடைவெளியில்(antenna gap) நமது கைவிரல் தற்செயலாக தொடுமிடத்து எமக்கு வரும் தொலைபேசி அழைப்பில் தடங்கள் ஏற்படலாம் எனவும் சமிஞ்ஞை அளவு சடுதியாக மிகப்பெரியளவில் குறைவடைவதே இதற்கு காரணமாகும் என தெரிவித்துள்ளது.

இதற்கான தீரவையும் இந்த நிறுவனம் தர மறக்கவில்லை. ஐ-போனில்(iphone 4) காணப்படும் அந்த சிறிய அண்டென்னா இடைவெளியை ஒரு சிறிய duct tape துண்டினைக்கொண்டு மறைத்துவிடுவதன் மூலம் இந்த குறைபாட்டினை தீர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Leia mais...

மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு

மைக்ரோ சொஃப்ட்(microsoft) நிறுவனம் தனது புதிய உற்பத்தி தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. தனது விண்டோஸ் 7(windows) இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் tablet pc க்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது. இது ஸ்மார்ட்(smart) சாதன பாவனையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பை தனது வியாபார பங்காளர்களுடன் இடம்பெற்ற மகாநாட்டில் வெளியிட்டிருந்தது. இங்கு Hp, Asus, Dell, Samsung, Toshiba, and Sony போன்ற நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Apple நிறுவனத்தின் ipad வெளியாகி 80 நாட்களுக்குள் 3 மில்லியன் விற்றுத்தீர்ந்த நிலையில் இந்த அறிவிப்பானது மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leia mais...

Jul 12, 2010

ஜிமெயிலை IE ல் பயன்படுத்தும் போது படங்கள் தெரியவில்லையா?

உலகின் முன்னணி மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் பாதுகாப்பான மின்னஞ்சல் சேவையின் அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது அதன் ஜிமெயில் முகவரி https://mail.google.com/mail  என்று வரும். அதாவது Secured HTTP Connection. இதனால் தகவல் பரிமாற்றம் கூடுதல் பாதுகாப்பில் நடக்கும். பொதுவாக் இந்த https வகை தொடர்பு பண பரிமாற்றங்களுக்காகவும், தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்காகவும் பயன்படுத்தப்படும்.

ஆனால் நீங்கள் ஜிமெயிலை IE8 உலாவியில் பார்ப்பதாக இருந்தால் https பயன்படுத்தினால் அதில் வரும் பிற படங்களை பாதுகாப்பில்லாதது என நினைத்து IE8 பயனாளருக்கு காட்டாது.

இதை சரிசெய்ய ஜிமெயில் முகவரி https:// என்று இருப்பின் அதை http:// என்று வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்,

நிரந்தரமாக http:// என வைக்க ஜிமெயில் அமைவுகளில் (settings) சென்று Browser connection என்ற தலைப்பில் இருக்கும்

Always use https
Don't always use https

என்பதில் Don't always use https என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.

Leia mais...

Jul 11, 2010

மிகவும் அறிந்து கொள்ள வேண்டிய சோஷியல் நெட்வார்க்

கற்றுத்தேர்ந்தவர்களோடு நாம் பழகினால், நாமும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் நாம் கற்றதையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இதற்கு இன்டர்நெட்டில் எங்கு செல்வது? நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள். சரியான கருத்துரைகளை (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி? இந்த குறையைப் போக்கும் வகையில், கற்றவர்கள் கலந்துரையாடி, தங்களுக்கு தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி www.wepapers.com. இது ஒரு கல்வியாளர்களின் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லலாம்.

இதில், பெரும்பாலும் பல்கலை மற்றும் கல்லுõரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இடம்பெறுகின்றனர். இதில் கலந்து கொள்வதன் மூலம் அதில் உள்ள அறிவு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கலாம். நமக்கு தெரிந்ததை இதில் பதிப்பிக்கலாம். ஆய்வுச் சுருக்கங்கள் (abstracts)கட்டுரைகள், உரைக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவை இங்கு பெருமளவில் இடம்பெற்றுள்ளன.

இவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளனர். 40 வகைகளில் இவை கிடைக்கின்றன. உலகின் அனைத்து பொருட்களும் இதில் அடங்கும். இந்த கட்டுரைகள் பிளாஷ் தொழில்நுட்பத்தில் காட்டப்படுகின்றன. (யுட்யூப் மற்றும் பிற வீடியோ கிளிப்புகளைக் காட்டுவது போல) கட்டுரைகளில் சுருக்கம் அல்லது ஒரு சிறிய முன்னோட்டத்தினைப் பார்த்து, பின் அவற்றை டவுண்லோட் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்து டவுண்லோட் செய்திடலாம்.

இந்த தளத்தின் இடது பக்கம் உள்ள பிரிவில், நாங்கள் விரும்பும் கட்டுரைகள் (Papers We Like) என்று ஒரு பட்டியலில், அப்போது பதியப்பட்ட சிறந்த ஏழு கட்டுரைகள் காட்டப்படுகின்றன. நீங்களாக ஒரு பொருள் குறித்து கட்டுரை ஒன்றை தேட வேண்டும் எனில், நடுப்பக்கத்திற்குச் செல்லலாம். இங்கு உள்ள Search கட்டத்தில் பொருள் குறித்த சொல்லை டைப் செய்து "எனி (any)' என்பதில் கிளிக் செய்தால் உடன் கட்டுரைகளின் பட்டியல் கிடைக்கும்.

நிச்சயமாக, நீங்கள் அதிசயப்படத்தக்க வகையில் தேடுவதற்கு கொடுத்த பொருள் குறித்த பல்வேறு கோணத்தில் கட்டுரைகளின் தலைப்பைக் காணலாம். நீங்கள் உங்கள் கட்டுரையை இதில் பதிய வேண்டுமா? இதில் பதிவு என்பது மிக மிக எளிமையானது. பெயர், கல்லூரி அல்லது பல்கலை முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து Capcha சோதனையை முடித்தால் போதும். பின்னர் sign up செய்து உள்ளே நுழையலாம். நீங்கள் ஒரு பொருள் கற்றுக்கொடுக்க எண்ணினால், கோர்ஸ் லீடர் என்ற பிரிவின் மூலம் செல்லலாம். அல்லது உங்கள் கட்டுரையை உங்கள் மாணவர்கள் அல்லது மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து குழுவாக அமைத்திடலாம்.

கட்டுரைகளை அப்லோட் செய்வதும் மிக எளிதாக உள்ளது. அப்லோட் செய்த பின்னர், அந்த கட்டுரை குறித்த சுருக்க தகவல்களை நீங்கள் அதற்கான படிவத்தில் தர வேண்டும். கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக்கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஒர் அருமையான இணையதளம் இது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரைச் சேர்ந்த Hanan Weiskopf மற்றும் Ehud Zamir என்ற இரு மாணவர்களால் இந்த தளம் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இதற்கான நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

இந்த தளத்தின் முகவரி

Leia mais...

Jul 9, 2010

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.

இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது.ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர். மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்த வழி. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன் இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். இதனால்,  தூக்கம் வருவதில் நாளடைவில் சிக்கல் எழும் என, நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ தெரிவித்துள்ளார்.

Leia mais...

Jul 8, 2010

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?

1. Boot Sector Viruses:

அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.

2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:

இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.

3. Stealthy Virus:

இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.

4. MultiPartite:

இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.

5. Polymorphic:

பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.

6. Macro

மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.

- Vino's cafe

Leia mais...

Jul 5, 2010

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.

'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.

'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.

இதன் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண எமது வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,

"எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை எமக்கு உண்டு. தாய்மொழியில் இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று தமிழிலும், 'லங்கா' என்று சிங்களத்திலும், நாம் அறிமுகபப்டுத்தியுள்ளோம்.

அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது இலங்கையில் தான் என்பதும் பெருமைக்குரியதே. இதனூடாக தமிழ் - சிங்கள் மக்களிடையே சமத்துவ நிலைமை உருவாக்கம் பெற்றுள்ளது" என்றார்.

அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது,

"ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை. இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்.

Leia mais...

Jul 4, 2010

விண்டோஸ் 7 : உலகில் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம்?!

விண்டோஸ் 7 இயங்குதளம் (Operating System) கடந்த அக்டோபர் 22 2009 அன்று வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 வெளியிடப்பட்ட 6 மாதங்களில் உலகத்தில் 10 ல் ஒரு கணினியில் பயன்படுத்தும் இயங்குதளமாக மாறியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இயங்குதள வரலாற்றில், விண்டோஸ் 7 தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் செய்யபட போகும் இயங்குதளமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கருதுகிறது.

மைக்ரோசாப்ட் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், $14.5 bn மார்ச் 31 வரையுள்ள காலாண்டிற்கான வருவாயாக தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நிறுவன தலைமை கணக்கு அலுவலர் (CFO) Peter Klein “continues to be a growth engine” என்றும் கூறியுள்ளார்.

பெரும்பாலான முன்னணி கணினி நிறுவனங்கள் விண்டோஸ் 7 ஐ தங்கள் கணினிகளுக்கு இயங்கு தளமாக்க (OS) திட்டமிட்டுள்ளனர்.

விண்டோஸ் 7 இதற்கு முந்தய version விஸ்டாவை விட மிகவும் எளிதாக மற்றும் வேகமாக இயங்கும் தளமாக (OS) இருப்பதே இதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

Leia mais...

Jul 3, 2010

கணனிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களின் பொதி

கணணியை புதியதாக வாங்குபவர்கள் அல்லது கணனியில் புதியதொரு இயங்குதளத்தை (Operating system) நிறுவினால் அததற்கு சில அடிப்படையான மிக மென்பொருட்கள் தேவைப்பாடு அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தேடி எடுத்து நிறுவுவது என்பது மிக ஒரு கடினமான விடயம். அப்படியானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நிறுவுவது என்பது நேரம் விரயமான செயல். அப்படியான மென்பொருட்களை ஒரே மென்பொருளில் எடுத்து நிறுவினால் மிக இலகுவாக இருக்கும் அத்தகைய ஒரு மென்பொருள் பொதி பற்றிய பதிவுதான் இது.

Ninite என்னும் மென்பொருளானது எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் பெறக்கூடியதான ஒரு மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமான ஒரு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். இந்த மென்பொருளில் இணைய உலாவிகள் (Web Browsers), தகவல் பரிமாற்ற ஊடகங்கள் (Messaging), காணொளி, ஒலி ஊடகங்கள் (Media Players) , புகைப்பட வடிவமைப்பு மென்பொருட்கள் (Imaging), ஆவணமென்பொருட்கள் (Documents), கணணி பாதுகாப்பு(Security), போன்ற இன்னும் பல மென்பொருட்களை உள்ளடக்கியதாக இந்த மென்பொருள் பொதி காணப்படுகின்றது. மிகவும் பயனுள்ள இலவச மென்பொருள் என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.

தரவிறக்க இணையச்சுட்டி

IT Park

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo