கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 21, 2011

எனக்கு பிடித்த 10 பெண்குரல் பாடல்கள் (தொடர்பதிவு)

தோழி ஜெ.ஜெ அழைப்பினை ஏற்று இத்தொடர் பதிவினை பதிவிடுகின்றேன். முதலில் தொடர்பதிவிற்கு அழைத்த தோழி ஜெ.ஜெ க்கு நன்றிகள். தாமதமாக பதிவிடுவதற்கு மன்னிக்கனும் தோழி... பதிவிற்குள் நுழைகிறேன்.. எனக்கு பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்  தெரிவு....

முதலாவது தெரிவாக.

"ப்ரியமான தோழி" படத்தில் இருந்து சித்ரா பாடிய பாடலான காற்றே பூங்காற்றே கவிதை சொல்வாயா... இப்பாடலின் இசை அருமை.  நண்பனுக்கு ஆறுதல்  கூறும் ஒரு  பாடல்.. நிஜத்தில இப்படியான நட்பை காண்பது மிக  அரிது. ஒவ்வொரு வரிகளிலும்  மிக ஆழமான கருத்துள்ளது அதுவே எனக்கு இப்பாடல் பிடிக்க காரணம்.. 

இப்பாடலில் ரொம்ப பிடித்தவரிகள்
நதியென்பது ஓர் நாள் கரையென்பதை சேரும்
எப்போதுமே ஓடும் நதியாகலாம்....
றோஜாச்செடி போலே நீ பூக்கலாம்இங்கே
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே..
அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட க் கூடாதே... 
"ஓவியன் கைவலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது"
டுத்து வரும் ஒவ்வொரு வரிகளும் ஆழமான  வரிகள்

**********************************************

 இரண்டாவது தெரிவாக..

"மாயி" படத்திலிருந்து  பாடகி சுஜாதா பாடிய பாடலான நிலவே வான்நிலவே வான்நிலவே வார்த்தை..இப்பாடலில் அவளின் ஏக்கம்.... ஏக்கம் நிறைந்த வரிகள்... மிக மிக பிடிக்கும்
இப்பாடலில் பிடித்த வரிகள்.
"கண்களை மூடிக்கொண்டால் வெளிச்சம் இருக்காது...
தீ நடுவில் நீயே நின்றால் தீர்வு கிடைக்காது...
சூரியன் உதிப்பதை நிறுத்திக்கொண்டால்
உலகில் விடிவேது...
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்
உயிர்கள் கிடையாது...

***********************************************

 மூன்றாவது தெரிவாக

"நினைத்தேன் வந்தாய்" படத்தில் சித்ரா பாடிய பாடலான  உன்மார்பில் விழிமூடி தூங்குகிறேன் தினமும் கனவில்... எனும் பாடல். மணாளனை நினைத்து கற்பனையில் லயித்திடும் ஒரு பெண்ணின் பாடல். ஒரு பெண்ணின் காதல் கற்பனைகளை அழகாக வெளிப்படுத்தும் அருமையான பாடல்.
இப்பாடலில் என்னை கவர்ந்த வரிகள்
 நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் 
கண்ணில் கனவும் வற்றாமல்
ஏனிந்த நிலமை புரியவில்லை
இந்த பரவசம் உனக்குள்ளும் இருக்கின்றதா?

***********************************************

நான்காவது தெரிவாக...

"சத்துரியன்" படத்தில் சொர்ணலதா பாடிய மாலையில் யாரோ மனதோடு பேச.....எனும் பாடல். இப்பாடலில் வரும் இயற்கை காட்சிகள் அருமையிலும் அருமை... இயற்கையை ரொம்பவே ரசிப்பேன். 
பிடித்த வரிகள்
"தென்றலே பாட்டெழுது
அதில் நாயகன் பெயரெழுது...
வருவான் காவல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற...
கரைமேல் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து என் கண்ணை பார்க்க.."
காட்சிகளுடன்  பாடல் வரிகளை கேட்கும் போது மனதில் ஒருவகை அமைதி கிடைக்கும்
***********************************************

ஜந்தாவது பாடலாக... 

"என் ஆசைமச்சான்"  படத்தில் சித்தரா பாடிய கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன்.....எனும் பாடல்.  எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.
 இப்பாடலில் பிடித்த வரிகள்
கறுப்பு நிலா நீதான் கலங்குவதேன் 
துளித்துளியா கண்ணீர் விழுவது ஏன்
சின்ன மானே மாங்குயிலே உன் மனசில என்ன குறை
பெத்த ஆத்தா போலிருப்பேன்
இந்த பூமியில் வாழும் வர...
அடுத்த வரும் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. தனிமையில் இப்பாடலை  கேட்கும் போது அழுகையே வந்திவிடும்.

***********************************************

 ஆறாவது பாடலாக....
கோபுர தீபம் படத்திலிருந்து என் வாழ்க்கை மன்னவனே உன்னை என்று நான் அடைவேன்.... எனும் பாடல். பாடியவர யாரென தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கூறுங்களேன். இப்பாடலில் வரும் எல்லா வரிகளும் அருமை..

ரொம்ம பிடித்த வரிகள்.
பொங்கும் கடலுக்கு அணையுண்டு 
உண்மை அன்புக்கு அணையுண்டா..

 ***********************************************

ஏழாவது பாடலாக. 

"காதல் சுகமானது"  படத்திலிருந்து பாடகி சித்ரா பாடிய பாடலான சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்... எனும் பாடல்.
இப்பாடலில் பிடித்தவரிகள் 
"தூண்டிலினை தேடும் 
ஒரு மீன்போல ஆனேன்
துயரங்கள் கூட அட சுகமானது"

 ***********************************************

எட்டாவது பாடலாக..

"ஆட்டோகிராப்" படத்திலிருந்து  பாடகி சித்ரா பாடிய பாடலான ஒவ்வொரு பூக்களுக்குமே.... எனும் பாடல். மறக்கமுடியாத ஓரு பாடல். வாழ்க்கையின் சாதகமான பக்கங்களை சொல்லும் வகையில் ஒவ்வொரு வரிகளும்.
இப்பாடலில் பிடித்த வரிகள் என குறித்துச் கூறமுடியாது..அனைத்தும் ஆறுதல் கூறும் அருமையான வரிகள்..
"அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வியின்றி வரலாறா"

***********************************************

ஒன்பதாவது பாடலாக...
'பூவெல்லாம் உன் வாசம்" படத்திலருந்து  பாடகி சொர்ணலதா பாடிய  திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே...
ஜோதிகா நடிப்பை ரசித்துக்கோண்டே இருக்கலாம்.

***********************************************

பத்தாவது பாடலாக...
கடைசித்தெரிவாக படம், பாடியவர் எதுவுமே தெரியல. பாடல் மட்டும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... நீங்களும் கேட்டு பாருங்கள். 
குறிப்பு:-இப்பாடல கேட்டு விட்டு போகமல் உங்களுக்கு தெரிந்தால் எந்த படத்தில இப்பாடல் என கூறிச்செல்லுங்கள்.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo