கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jul 30, 2010

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை

இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை “நடமாடும் நோய்க்கூடம்” என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.

செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது.

அதில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிந்தது.

அதாவது கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது. ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா உள்ளது.

மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீரியாக்கள் உள்ளன.

அசுத்தமான செல்போன்களை பயன்படுத்தும்போது அதன்மூலம் கிருமிகள் நமது உடலில் புகுந்து வயிற்று உபாதை, மூச்சு கோளாறு போன்ற பல்வேறு நோய்களும் தாக்குகின்றன.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo